News August 25, 2024

50 சதவீத மானியத்தில் உரம், விதைகள்

image

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உளுந்து பாசி மற்றும் சிறுதானிய தரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிரியல் காரணிகள் போன்றவை 50 சதவீத மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News March 9, 2026

தூத்துக்குடி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News March 9, 2026

தூத்துக்குடி: எம்ஜிஆரை மறந்த அதிமுக? சர்ச்சை போஸ்டர்

image

எட்டையாபுரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி கோலம் போட்டிகள் நடைபெற்றது. இதற்காக அடிக்கப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இது அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் இந்த போஸ்டர் தற்பொழுது இணையங்களில் வைரலாகி வருகிறது.

News March 9, 2026

தூத்துக்குடி: அண்ணன் குத்தி கொலை? தம்பி கைது!

image

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மகன் பாலன் (28) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று மாலை தெரு பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது தம்பி டைசனுக்கும் (24) இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், டைசன், பாலன் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலன் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் டைசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!