News August 2, 2024
50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக, மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் முறையிட்டார். சௌந்தர பாண்டியன் 50,000 லஞ்சம் கேட்டு இன்று பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 30, 2025
திருச்சி: கஞ்சாவுடன் வசமாக சிக்கிய வாலிபர்கள்

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலர் ஒன்றை நிறுத்தி, அதில் வந்தவர்களை போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களது பையை சோதனை செய்ததில், அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட கனிமுகமது, கெளதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News November 30, 2025
திருச்சி: தாய் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை

ஸ்ரீரங்கம் புது தெருவை சேர்ந்தவர் கிருத்திகா (17). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த கிருத்திகா நேற்று முன்தினம் இரவு, துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 29, 2025
திருச்சி மாவட்ட மக்கள் கவனத்திற்கு!

திருச்சி மாவட்டத்தில் டிட்வா புயல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கிழக்கு 0431-2711602, மேற்கு 0431-2410410, திருவெறும்பூர் 0431-2555542, ஶ்ரீரங்கம் 0431-2230871, மணப்பாறை 04332-260576, மருங்காபுரி 04332-299381, லால்குடி 0431-2541233, மண்ணச்சநல்லூர் 0431-2561791, முசிறி 04326-260226, துறையூர் 04327-222393, தொட்டியம் 04326-254409 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


