News February 25, 2025
5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News March 12, 2026
இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல்!

இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. UAE-ல் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி புறப்பட்ட தாய்லாந்து கப்பல் மீது ஹார்முஸ் நீரிணையில் வைத்து தாக்குதல் நடந்துள்ளது. எனினும் எரியும் கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் குறித்த அச்சம் நாட்டில் தலைவிரித்தாடும் நிலையில், இத்தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
IPL: அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா?

டி20 WCல் சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு & துபே இருவரும் சிறப்பாக செயல்பட்டதால் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என அந்த அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அப்போது தோனி குறித்து பேசிய அவர், IPL 2026 சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி பங்கேற்பார்; அதேநேரம் அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா? இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா? என்பதை அணி கிரிக்கெட் தலைமை முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.
News March 12, 2026
வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடா?

போர் காரணமாக LPG சிலிண்டர்களுக்கு தட்டுபாடு நிலவும் நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. LPG தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது; வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், வீட்டு நுகர்வோருக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி சிலிண்டர் தொடர்ந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


