News February 25, 2025

5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

image

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Similar News

News February 25, 2025

அதிமுக மூழ்கும் கப்பல்: ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்

image

இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அதில் யாரும் ஏறமாட்டார்கள் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கட்சி அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கட்சியை மீட்க துரோகிகளை அகற்ற வேண்டும். 2026ல் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது என விமர்சித்துள்ளார்.

News February 25, 2025

3 வங்கிகள் வட்டியை குறைத்தன

image

வீட்டு, வாகன கடனுக்கான வட்டியை இதுவரை 3 வங்கிகள் குறைத்துள்ளன. வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து எஸ்பிஐ, பிஎன்பி ஆகிய வங்கிகள், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை அண்மையில் 0.25% குறைத்தன. இதையடுத்து தற்போது பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா (BOM) வங்கியும் வட்டியை 0.25% குறைத்துள்ளது. வீட்டுக்கடன் வட்டியை 8.10%, வாகன கடன் வட்டியை 8.45%ஆகக் குறைத்துள்ளது.

News February 25, 2025

விவேக் ராமசாமியின் அடுத்த டார்கெட்

image

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். டிரம்ப் அரசில் அரசாங்க திறன் துறை (DOGE) பொறுப்பில் இருந்து விலகிய சில நாள்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தொழில் தொடங்குவது, தொழில் வளர்ச்சிக்கும் நாட்டிலேயே சிறந்த மாகாணமாக ஓஹியோவை மாற்றுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!