News April 24, 2024

இங்கிலாந்து செல்ல முயன்ற 5 பேர் பலி

image

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவர்களைத் தடுக்க இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அகதிகள் ஒரு படகில் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்றனர். அப்போது மணல் திட்டில் படகு மோதியதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News January 20, 2026

ஆன்லைனில் EB பில் கட்டுவதற்கு முன் இத படிங்க!

image

EB பில் தொடர்பாக போலி SMS சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பகிரப்படுவதால், போலியான லிங்க் மூலம் பில் கட்டி ஏமாற வேண்டாம் என TNEB அறிவுறுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதள லிங்க் உடன் மெசேஜ் வந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான TNEB செயலி & அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே EB பில் கட்டும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.

News January 20, 2026

ஆண்கள் பாவமில்லையா? செல்லூர் ராஜு

image

வயதான, பாவப்பட்ட ஆண்கள் இருக்க மாட்டார்களா? அதனால்தான், பேருந்துகளில் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதாக செல்லூர் ராஜு பேசியுள்ளார். ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அதிமுக, அவர்களுக்காக பாடுபடுகிறது என்ற அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து திமுக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது என்றார். மேலும், திமுக போல தகுதி பார்த்து நலத்திட்டங்களை வழங்குவதில்லை என கூறியுள்ளார்.

News January 20, 2026

BREAKING: விஜய்யின் அடுத்த முக்கிய முடிவு

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் நேற்றும் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இதனிடையே, விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல் என CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வராமல், கரூர் வழக்கை சட்ட வல்லுநர்களுடன் கையாள விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!