News March 5, 2025
18 பேர் பலி எதிரொலி: 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில், 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்.15ஆம் தேதி கும்பமேளா செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத அளவிற்கு பயணிகள் குவிந்ததால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 9, 2025
ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக

ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதியில் இருந்து, டிச.18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், 25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 9, 2025
ECI-ஐ வைத்து ஜனநாயகத்தை சிதைக்கும் மத்திய அரசு: ராகுல்

உடனே SIR பணிகளை நிறுத்த வேண்டும் என லோக் சபாவில் நடத்த விவாதத்தில், ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பிரேசில் மாடல் போட்டோ இந்திய வாக்காளர் பட்டியலில் வந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்தை சிதைப்பதற்காக ECI-ஐ பயன்படுத்துகிறது மத்திய அரசு என்றும் அவர் விமர்சித்துள்ளார். அனைத்து இந்திய அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News December 9, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹1,000.. வந்தாச்சு HAPPY NEWS

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக் கணக்கில் இன்னும் 3 நாள்களில்(டிச.12) ₹1,000 வரவு வைக்கப்பட உள்ளது. சென்னையில் CM ஸ்டாலின் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவுள்ளார். திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ₹1 அனுப்பி ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.


