News March 5, 2025
18 பேர் பலி எதிரொலி: 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில், 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்.15ஆம் தேதி கும்பமேளா செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத அளவிற்கு பயணிகள் குவிந்ததால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 22, 2025
ராசி பலன்கள் (22.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 22, 2025
அப்பாவான இந்திய அணியின் ஆல்ரவுண்டர்

இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்த அவர், இதற்காக தான் 9 மாதங்களாக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஷர்துல் கடந்த 27 பிப்ரவரி 2023-ல் மிதாலி பருல்கர் என்பவரை திருமணம் செய்தார். தற்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
News December 22, 2025
உத்தராகண்ட் பள்ளிகளில் பகவத் கீதை கட்டாயம்

உத்தராகண்ட் பள்ளிகளில் பகவத் கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முயற்சியால் மாணவர்கள் இந்திய கலாசாரத்தை அறிய முடியும் எனவும், அது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் இடையே சுய ஒழுக்கம் மற்றும் தலைமை பண்புகளை வளர்ப்பதே இதன் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.


