News May 10, 2024
மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது வழங்கியுள்ளன

பிரதமர் மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் மோடியை மதிப்பதாகவும், 5 அரேபிய முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்துள்ளதாகவும், இதுபோல் அந்நாடுகள் வேறு எந்த தலைவருக்கும் விருது அளித்ததில்லை என்றும் கூறினார்.
Similar News
News September 18, 2025
மருத்துவமனையில் காமெடி நடிகர்.. உதவி செய்த இபிஎஸ்

பிரபல காமெடி நடிகர் குண்டு கல்யாணம் கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு பண உதவி தேவை என செய்தி வெளியானது. இந்நிலையில், அவரின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்கும் என்று EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தகக்து.
News September 18, 2025
லஞ்சம் கேட்குறாங்களா? இந்த நம்பருக்கு உடனே அடிங்க

அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? எதற்கும் யோசிக்காமல் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். இதுபோன்ற பிரச்னையில் நீங்கள் சிக்கினால் உடனடியாக 1064 / 1965 – க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in -க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்த நபர் யார் என்ற தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 18, 2025
இந்தி திணிப்புக்கு நோ என்ட்ரி: ஸ்டாலின்

அன்று முதல் இன்று வரை ஆதிக்கத்துக்கும், இந்தி திணிப்புக்கும் தமிழ்நாட்டில் நோ என்ட்ரிதான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது எனக் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பை மறந்து EPS ஒருமையில் பேசுவதாக சாடினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.