News May 10, 2024
மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது வழங்கியுள்ளன

பிரதமர் மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் மோடியை மதிப்பதாகவும், 5 அரேபிய முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்துள்ளதாகவும், இதுபோல் அந்நாடுகள் வேறு எந்த தலைவருக்கும் விருது அளித்ததில்லை என்றும் கூறினார்.
Similar News
News November 4, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் கைதா?… பரபரப்பு தகவல்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தைக்கு அப்பா தான்தான் என்றும் <<18195589>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால், மாதம்பட்டி கைது செய்யப்படலாம்.
News November 4, 2025
கம்பெனிக்காக 17 ஆண்டுகள் உழைத்த நபர்.. கண்ணீர் பதிவு

17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஊழியர் ஒருவரின் X பதிவு வைரலாகி வருகிறது. நான் வேலையிழப்பு வேதனையில் இருந்தபோது குழந்தைகளை முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்த சிரிப்பு எனக்கு கண்ணீரை வரவழைத்தது. இதுவரை என்ன இழந்தேன் என இப்போது தெரிகிறது. நிறுவனங்கள் ஒருபோதும் தியாகத்தை மதிப்பதில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.
News November 4, 2025
கோவை கொடூரத்தை தடுக்க தவறியது ஏன்? அன்புமணி

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, இந்த கொடூரத்தை தடுக்க தமிழக அரசு தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். போதை பொருள்களின் நடமாட்டம் சிறிதளவு கூட குறையவில்லை என்று கூறிய அவர், அந்த அளவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்துள்ளதாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்திற்காக, தமிழக ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


