News April 9, 2025

IPL-ல் அதிவேக சதமடித்த 5 ஜாம்பவான்கள்

image

IPL-ல் அதிவேகமாக சதமடித்த 5 வீரர்கள் யார் யார் என பார்க்கலாம். 2013ல் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளிலும், மில்லர் 38 பந்துகளிலும் சதமடித்து 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து 4-வது இடத்தில் உள்ளார். பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் 39 பந்துகளில் சதமடித்து 5-வது இடத்தில் உள்ளார்.

Similar News

News December 7, 2025

ஆறுபடையப்பனை மீண்டும் பார்க்க ரெடியா?

image

தியேட்டர்களில் சக்கைப்போடு போடும் ரீ-ரிலீஸ் படங்களின் வரிசையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமும் இணைகிறது. 1999-ல் வெளியான ‘படையப்பா’ படம் ரஜினியின் பிறந்தநாளான வரும் 12-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. 80s, 90s கிட்ஸ்க்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும் படையப்பாவை மீண்டும் தியேட்டரில் பார்க்க ரெடியா?

News December 7, 2025

ரோஹித், விராட் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்

image

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான தொடரில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 3-வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார். இந்த சாதனையை முதலில் படைத்த இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. இதனை தொடர்ந்து ரோஹித், ராகுல், விராட், கில் ஆகியோர் இந்த பட்டியலில் இணைந்தனர்.

News December 7, 2025

79 ஆண்டுகளாகியும் நீடிக்கும் காலனித்துவ மனநிலை: PM

image

சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்கு பிறகும், நாம் காலனித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபடவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். 2035-ல் நாம் 200 ஆண்டுகால காலனித்துவத்தை நிறைவு செய்கிறோம். எனவே அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் காலனி மனோபாவத்தை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மெக்காலே கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1835-ம் ஆண்டை தான் PM குறிப்பிடுகிறார்.

error: Content is protected !!