News March 18, 2024

வாக்காளர் பட்டியலில் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, பணிகள் குறித்து எடுத்துரைக்கும் சாகு, வாக்காளர் பட்டியலுடன் துணை வாக்காளர் பட்டியலை சேர்ப்பது தொடர்பாக கருத்து கேட்கிறார்.

Similar News

News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News January 21, 2026

நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் சாதனை!

image

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணியளவில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் மொரார்ஜி தேசாய் (6), மன்மோகன் சிங் (5), அருண்ஜெட்லி (5), ப.சிதம்பரம் (5), மற்றும் யஷ்வந்த் சின்ஹா (5) உள்ளிட்ட Ex. நிதி அமைச்சர்களை விட அதிகமுறை மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெறுவார்.

News January 21, 2026

TN-ல் கூலிப் படைகளின் அட்டூழியம்: TTV தினகரன்

image

குற்ற சம்பவங்கள், கூலிப் படைகளின் அட்டூழியம் என TN-ல் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று TTV தினகரன் கூறியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராடிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்நேரத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்பதுபோல அரசு செயல்படுவதாக கூறி பெருமை பேசுவது கேலிக்கூத்தானது என்றார். மேலும், மக்கள் மத்தியில் கவர்னர் உரை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!