News March 18, 2024
வாக்காளர் பட்டியலில் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, பணிகள் குறித்து எடுத்துரைக்கும் சாகு, வாக்காளர் பட்டியலுடன் துணை வாக்காளர் பட்டியலை சேர்ப்பது தொடர்பாக கருத்து கேட்கிறார்.
Similar News
News September 7, 2025
தள்ளுபடியுடன் அபராதம் கட்டிய CM சித்தராமையா

2024 ஆண்டில் இருந்து இதுவரை 7 முறை சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. விதிகளை மீறியதற்காக மொத்தமாக அவருக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50% தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே, ₹2,500 அபராத தொகையை சித்தராமையா செலுத்தியுள்ளார்.
News September 7, 2025
இந்தியாவின் 4-வது கோப்பை

ஆசியக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்தியா 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 1982 முதல் நடைபெற்றுவரும் இந்த தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. 4 முறை சாம்பியனான இந்தியா 2-வது இடத்திலும், 3 முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன. சீனா, ஜப்பான், மலேசிய அணிகள் ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை.
News September 7, 2025
தேவருக்கு பாரத ரத்னா கேட்கும் EPS-ன் கணக்கு இதுவா?

முத்துராமலிங்க தேவருக்கு <<17642038>>பாரத ரத்னா விருது<<>> வழங்குமாறு மத்திய அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், OPS உள்ளிட்டோரின் நீக்கத்தால் குறிப்பிட்ட சமூக வாக்குகளை அதிமுக இழந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த சமூகத்தின் அமைப்பினர், அவ்வப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை சமாளிக்கவே EPS இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளாராம்.