News February 16, 2025
இல்லத்தரசிகளுக்கு உதவும் ‘5’ கிச்சன் டிப்ஸ்

*கையால் மிளகாயை வெட்டிய பிறகு, எரிச்சலை தடுக்க எண்ணெய், உப்பு வைத்து ஸ்கிரப் செய்யுங்கள் *சமைத்த உணவில் உப்பு அதிகமாக இருந்தால், தோலுரித்த உருளைக்கிழங்கை போடவும் * சிட்ரஸ் பழங்கள், தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் *வெறும் பாட்டிலை மூடி வைக்கும் போது, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் *சமைத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்த, அதில் 1/4 துண்டு இஞ்சியை போட்டு சமைக்கவும்.
Similar News
News December 4, 2025
அணு பேரழிவு நடந்த இடத்தில் செழித்து வளரும் உயிர்!

உலகின் மிகமோசமான அணு உலை பேரழிவு நடந்த பகுதியாக உக்ரைனின் செர்னோபில் உள்ளது. இங்கு நிலவும் அணு கதிர்வீச்சால் இன்று வரை மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்படும் நிலையில், கருப்பு பூஞ்சை எனும் ஒரே ஒரு உயிர் மட்டும் செழித்து வளர்ந்து வருகிறது. பிற தாவரங்கள் எப்படி சூரிய ஒளியை வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுகிறதோ, அதேபோல், இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சை ஆற்றலாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News December 4, 2025
ஆணுறைகளுக்கு வரி விதித்த சீனா.. ஏன் தெரியுமா?

ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மீது, 2026 ஜனவரி முதல் வரி விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், இத்தகைய வரி விதிப்பின் மூலம் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என சீனா நம்புகிறது. ஒரு குழந்தை கொள்கையை கடுமையாக கடைபிடித்து வந்த சீனா, 1993 முதல் கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
டிசம்பர் 4: வரலாற்றில் இன்று

*1898–இயற்பியலாளர் கே.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் *1910–முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பிறந்தநாள் *1953-தமிழறிஞர் அ.வேங்கடாசலம் பிள்ளை நினைவு நாள் *1971-இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கியது *1974–நடிகை அனுபமா குமார் பிறந்தநாள் *1984–மன்னாரில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 தமிழ் மக்கள் படுகொலை


