News April 1, 2025
5 வயதாகியும் தலை நிற்காமல் தவிக்கும் குழந்தை!

கரூர், கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளியான நாராயண சாமி. இவரது 5 வயது மகளுக்கு தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் தங்கவேலிடம் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிதியுதவி அளிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 2, 2025
கரூரில் Chat GPT பயிற்சி முகாம்

கரூர்: தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு Chat GPT பயிற்சி வகுப்பு வரும் ஏப்.12ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 99943 22859 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <