News April 1, 2025

5 வயதாகியும் தலை நிற்காமல் தவிக்கும் குழந்தை!

image

கரூர், கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளியான நாராயண சாமி. இவரது 5 வயது மகளுக்கு தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதால் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் தங்கவேலிடம் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நிதியுதவி அளிக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News February 3, 2026

கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

image

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

image

வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ கண்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெரிய ரங்கப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டில், மதுபாட்டில்களை விற்றதாக திருமூர்த்தி என்பவரது மனைவி வசந்தா, 67; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 145 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News February 3, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!