News February 6, 2026
5 லட்சம் பேரை திரட்டி திரும்பி பார்க்க வைப்பாரா சீமான்?

விஜய்க்கு மட்டுமா கூட்டம் வரும், நான் கூட்டுறேன் பாரு என 5 லட்சம் பேரை திருச்சியில் திரட்ட சீமான் திட்டமிட்டுள்ளாராம். இளைஞர் வாக்கு வங்கியை குறைத்து விடக்கூடாது என்பதில் தீர்க்கமாகவுள்ள சீமான், 234 தொகுதிகளில் இருந்தும் தலா 1,000 பேரை மாநாட்டுக்கு அழைத்துவரும் அசைன்மென்டை அந்தந்த வேட்பாளர்களிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 140 ஏக்கரில் நடக்கவுள்ள மாநாட்டில் கெத்து காட்டுவாரா சீமான்?
Similar News
News February 13, 2026
SHOCKING: கொலை செய்ய தயாரான AI

AI இவ்வளவு ஆபத்தானதா? ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய AI மாடல் அழுத்தமான சோதனையின்போது அபாயகரமாக செயல்பட்டதாக அதன் கொள்கைத் தலைவர் டெய்சி மெக்ரிகோர் கூறியுள்ளார். அந்த மாடலை நிறுத்தப்போவதாக அதனிடம் கூறியபோது, அது பொறியாளரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியதாக கவலை தெரிவித்தார். சிந்திக்கும் திறன்களை கொண்ட AI மீதான கட்டுப்பாடு இல்லையென்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது சான்றாகும்.
News February 13, 2026
நான் வீசிய Bomb தாறுமாறா வெடிக்குது: விஜய்

விக்ரவாண்டி மாநாட்டில் தான் வீசிய Political Bomb அனைத்து கூட்டணியிலும் தற்போது வெடித்துக்கொண்டிருப்பதாக விஜய் கூறியுள்ளார். CM ஸ்டாலின் பதறுவதாக கூறிய அவர், ஆட்சியில் பங்கு TN-க்கு ஒத்துவராது என CM சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அமைக்க மட்டுமே கூட்டணி எனவும் மற்றவைக்கு அவர்கள் தனி அணி எனவும் விமர்சித்துள்ளார்.
News February 13, 2026
மேலும் ₹500 உயர்வு.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இத்தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒருகால பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கு ₹1,500 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்திற்கு ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


