News March 19, 2025

5 தலைமுறை கண்ட மூதாட்டி மரணம்

image

பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 20, 2025

திருப்பூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

image

திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகியவற்றை செலுத்தக்கூறி, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் வார இறுதி நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத, 568 வீடுகளில் குடிநீர் இணைப்பு, துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News March 20, 2025

திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

image

திருப்பூர், முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் ராக்கியாபாளையம் பகுதியில் பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவியும், பால்கடைக்கு வியாபாரம் பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டில் பின்பக்கம் வழியாக உள்ளே சென்ற மர்மநபர், ரூ.85 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News March 19, 2025

திருப்பூர் மாவட்ட காவல்துறை ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், ஊதியூர், மூலனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!