News October 27, 2024
5% ஊக்க தொகை தவறவிட வேண்டாம் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான சொத்து வரியை அக்டோபர் 30க்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகையை தவறவிட வேண்டாம் என்றும், காலக்கெடு முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக chennaicorporation.gov.in/gcc/online-pay… இந்த லிங்க் மூலமாக வரியை செலுத்தலாம்.
Similar News
News September 12, 2025
சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேவை பாதிப்பு

வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை. பயணிகள் CMRL மொபைல் செயலி, Paytm, PhonePe, Singara Chennai Card மற்றும் பயண அட்டைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம். மேலும் தகவல் வரும் வரை கவுண்டர்களிலும் டிக்கெட் வழங்கப்படும் என CMRL அறிவித்துள்ளது.
News September 12, 2025
சென்னையில் தீரா நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

சென்னை கே.கே நகரில் புகழ்பெற்ற ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ உள்ளது. பொதுவாக திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கே.கே நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
தூய்மை பணியாளர்கள் மயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை புறநகர் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்று சென்னை காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது 2 தூய்மை பணியாளர்கள், உணவுகளை உட்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.