News August 4, 2024

5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

image

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.

Similar News

News August 11, 2025

உண்மையான நட்பு எங்கே?

image

நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகிவிடமாட்டார்கள். `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உண்மையான நட்புணர்வு கொண்ட நண்பர்கள் இக்காலத்தில் குறைவே. நுகர்வு கலாசாரமும், அதற்கான பணநாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதர்களை தங்களுக்குள் நெருங்கிப் பழகவிடாமல் தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்காக, பொழுதை போக்கும் நட்பாகவே உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்க best friend யார்?

News August 11, 2025

மகளிர் உரிமைத் தொகை.. இதனை மறக்க வேண்டாம்!

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு செயல்படாத பேங்க் அக்கவுண்டை தவறுதலாக கொடுத்துவிட்டால் கவலை வேண்டாம். முதலில் பேங்குக்கு சென்று அந்த அக்கவுண்டை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில், புதிய அக்கவுண்ட் தொடங்கி அதற்கான தகவலை தாலுகா ஆபிஸில் சமர்பிக்க வேண்டும். அதன்பின், மகளிர் உரிமைத் தொகை புதிய அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். SHARE IT.

News August 11, 2025

யஷ் தயாளுக்கு தடையா?

image

பாலியல் பலாத்கார <<16987106>>வழக்கில்<<>> சிக்கியுள்ள RCB வீரர் யஷ் தயாளுக்கு உ.பி., கிரிக்கெட் சங்கம் (UPCA) தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ள UP T20 தொடரில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக விளையாட ₹7 லட்சத்துக்கு தயாள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், இதுகுறித்து அந்த அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

error: Content is protected !!