News December 5, 2024

5 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

image

மதுரை : பேரையூரைச் சேர்ந்த ராம்குமாரின் மனைவி ஆனந்த ஜோதி, மருதுபாண்டி என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவின் போது, அவரது 5 வயது மகன் ஜீவா பார்த்துள்ளான்.
இதனையடுத்து, ஜீவாவை அரைஞாண் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, பூச்சிக்கடியால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
ஆனந்த ஜோதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.

Similar News

News October 25, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

மதுரை டிராவல்ஸ் ஓனர் சேலத்தில் தற்கொலை

image

மதுரை, ஊத்தங்குடி, வள்ளல் நகரை சேர்ந்தவர் திவாகர், 29. சொந்தமாக டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதுதொடர்பாக அக். 20ல், சேலம் வந்த அவர், சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.அன்று இரவு துாங்கச்சென்ற அவர், நேற்று முன்தினம் முதல், வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் பசீர் அகமது, அறைக்கு சென்று பார்த்தபோது, திவாகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

News October 25, 2025

மதுரையில் தொழில் துவங்க விரும்பினால் ரூ.10 லட்சம் மானியம்

image

மதுரையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை துறைகளில் புத்தாக்க (புதிய) நிறுவனங்கள் தொழில் துவங்க விரும்பினால் மானியம் அளிக்கப்படும்.புதிய யூனிட்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் வரை மானியம் உண்டு. வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். புதிய தொழில் துவங்க நினைப்போருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!