News December 5, 2024
5 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மதுரை : பேரையூரைச் சேர்ந்த ராம்குமாரின் மனைவி ஆனந்த ஜோதி, மருதுபாண்டி என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவின் போது, அவரது 5 வயது மகன் ஜீவா பார்த்துள்ளான்.
இதனையடுத்து, ஜீவாவை அரைஞாண் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, பூச்சிக்கடியால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
ஆனந்த ஜோதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
Similar News
News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தாமதம்.!

திருப்பரங்குன்றத்தில் இரவு 7மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றுவதற்காக அங்கு திரண்டுள்ள இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை அனுமதிக்காமல், கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தீபம் ஏற்றப்படுமா.? இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரவு 10:30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
BIG BREAKING: சற்று நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபத்தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது சற்று நேரத்தில் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட உள்ளது.
News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மனுதாரர் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தீபம் ஏற்றும் மனுதாரர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல் ஆணையர் லோகநாதனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளளார். திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.


