News March 28, 2025

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

image

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

Similar News

News November 26, 2025

புதுச்சேரி: ஆணையர் எச்சரிக்கை

image

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.

News November 26, 2025

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்?

image

புதுச்சேரி தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் இன்று கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், புதுச்சேரியில் டிச.5ஆம் தேதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டனர். மேலும் காலாப்பட்டு முதல் உப்பளம் வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

News November 26, 2025

புதுவை: லோன் பெற்று தருவதாக பணம் மோசடி – இளைஞர்கள் கைது

image

புதுவை, கொடாத்துாரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவர் தன்னுடைய வங்கி விவரங்களை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். பின், மர்மநபர் ரூ.54 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் தான் லோன் பெறமுடியும் என கூறவே அவர் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகாரின்படி சென்னையைச் சேர்ந்த வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!