News March 28, 2025
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News December 1, 2025
புதுச்சேரியில் சராசரியை விட அதிகம் கொட்டித் தீர்த்த மழை!

புதுச்சேரியில் டிட்வா புயல் பாதிப்புகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார். பின்னர் அதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியின் சராசரி மழையளவு 1,355 மி.மீ., இதுவரை 1,455 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை காட்டிலும் 10 செ.மீ., மழை கூடுதலாக பெய்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக அனைத்து படுகையணைகளும் நிரம்பிவிட்டதாக தெரிவித்தார்.
News December 1, 2025
புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
புதுச்சேரி: விஜயின் ரோடு ஷோவிற்கு எம்எல்ஏ எதிர்ப்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதி எம்எல்ஏ அணிபால் கென்னடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் “தவெக தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ஷோவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ரோடு ஷோவிற்கு பதிலாக உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கூட்டம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காதன தெரிவித்தார்.


