News March 28, 2025

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

image

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

Similar News

News November 23, 2025

புதுச்சேரி: அரசு வங்கியில் வேலை!

image

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

புதுச்சேரி: BSNL சார்பில் சிறப்பு முகாம்!

image

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில், சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நாளை (நவ.24) முதல் (நவ. 27) வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், திருக்கனூர், தவளக்குப் பம், வில்லியனூர், ஆனந்தா இன் அருகில், பத்துக்கண்ணு, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி அருகே,ஆரிய பாளையம், கோட்டக்குப்பம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பிஎஸ்என்எல் சிம்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

News November 23, 2025

புதுவை: வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

image

புதுவை உழவர்கரை நகராட்சி பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியுரியும் வணிக நிறுவனங்களில் உள்புகார் குழுவை ஒரு வாரத்தில் உருவாக்கி, அதனை ஷிபாக்ஸ் (https://shebox.wcd.gov.in/) என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அத்தகவலை நகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர் கரை நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!