News March 28, 2025
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News November 10, 2025
புதுவை பி.எஸ்.என்.எல் டெண்டர் அறிவிப்பு

புதுவை பி.எஸ்.என்.எல் சார்பில் வில்லியனூர், மேட்டுப் பாளையம் பகுதிகளில் வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை நிர்வகிக்க விருப்பமுள்ள வணிக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ டெண்டர் போர்டல் http://www.etenders.gov.in/eprocure/app (அ) http://bsnl.co.in/tenders/tenderlivesearch என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
புதுவை: போலீஸ்காரர் மோட்டார் சைக்கிள் திருட்டு

அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர்(30). இவர் புதுவை காவல்துறையில் போலீஸ்காரராக பணி புரிகிறார். சம்பவத்தன்று அவர் உறவினர் சுரேந்தர், திவாகரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு கடற்கரையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 10, 2025
புதுவை: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


