News March 28, 2025
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News December 1, 2025
புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி பதவிக்கு தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர், பதவிக்கு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்தது.
News December 1, 2025
புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். <
News December 1, 2025
புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகியோர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஆணையினை வழங்கினர்


