News August 4, 2024

5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

image

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.

Similar News

News November 19, 2025

வயிறு முட்ட சாப்பிடும் ஆளா நீங்க? அப்போ இது முக்கியம்

image

சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அந்த உணவானது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் இரவில் தூக்கம் வருவதும் கடினம். இதற்கு ஒரே தீர்வு ஒரு கிளாஸ் சூடான நீர்தான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாதாம். சிறிது இடைவெளி விட்டு குடித்தால் செரிமானம் இலகுவாக இருக்குமாம். மூக்கு முட்ட சாப்பிடும் உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.

News November 19, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: மும்பையில் சிக்கிய மூவர்

image

டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக மும்பையை சேர்ந்த 3 பேரை பிடித்து NIA விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணைக்கு பின் மூவரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பிரத்யேக தகவல் தொழில்நுட்ப செயலி மூலம் இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் NIA தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.

News November 19, 2025

பாரதியார் பொன்மொழிகள்

image

*விழும் வேகத்தை விட, எழும் வேகம் அதிகமாக இருந்தால். தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.

error: Content is protected !!