News March 26, 2025
சென்னையில் ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டர்!

சென்னை போலீஸ் கமிஷனராக கடந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ், ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டரை நடத்தியுள்ளார். ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, ராஜா ஆகியோர் வரிசையில், நள்ளிரவில் செயின் பறிப்பு கொள்ளையன் <<15888455>>ஜாபர் குலாம் ஹூசைன்<<>> என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். இதனை பலர் வரவேற்ற நிலையில், கமிஷனர் அருணை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News July 11, 2025
மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
News July 11, 2025
6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம்!

ஆப்கனில் கொடுத்த கடனை கட்ட முடியாத தந்தை ஒருவர், பொம்மையுடன் விளையாட வேண்டிய தனது 6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை நிறுத்தாமல், ‘9 வயசு வரை குழந்தையை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாதீங்க’ என தலிபான் அரசின் தீர்ப்பளித்திருப்பது மேலும் அதிரவைக்கிறது. கண் துடைப்பாக, குழந்தையின் தந்தை & திருமணம் செய்தவரை கைது செய்துள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?
News July 11, 2025
செட்டில்மென்ட் ஓ.கே.. முடிந்தது மாறன்ஸ் பிரச்னை (1/2)

சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன், அவரது சகோதரரான திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே ஏற்பட்ட பிரச்னை, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டால் முடிவுக்கு வந்துள்ளது. இப்பிரச்னைக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்ற புதுத் தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதிக்கு ஜூன் 10-ல் தயாநிதி நோட்டீஸ் அனுப்பும் முன்பே, 2 பேர் இடையே ஸ்டாலின் சமரச பேச்சு நடத்தியதாகவும், ஆனால் 2 பேரும் அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.