News August 6, 2024

49 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Similar News

News February 11, 2026

ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (பிப்.10) மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி சுமை குறைத்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

ராணிப்பேட்டை: 100 ரூபாய்க்கு ஆசை; அடி, உதைத்த மக்கள்!

image

திமிரியில் ரூ.100 கொடுத்தால் மருத்துவ காப்பீடு தருவதாக கூறி 5 பேர் கொண்ட குழு வலம் வந்தது. இதே போல் கணியனூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட போது சந்தேகமடைந்த வாலிபர் ஒருவர் காப்பீடு அட்டையை வாங்கி ஸ்கேன் செய்ததில் அது போலி என தெரிய வந்தது. இதை அறிந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருவரையும் அடித்து உதைத்து சிறை பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!