News June 26, 2024

49 கோடி கடனுதவி: ஆட்சியர் தகவல்

image

கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 55 பேருக்கு ரூ.6.79 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் 927 பேருக்கு ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

கோவையில் வேலை வேண்டுமா?

image

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (டிச.13) காலை 8 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 285 நிறுவனங்கள் பங்கேற்று 19,824 பணியிடங்கள் வழங்குகின்றன. மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News December 12, 2025

கோவை: தங்கம் பதக்கத்தை தட்டி தூக்கிய சிறுவன்!

image

கோவை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள சோமையம்பாளையத்தில் 3-ம் வகுப்பு மாணவன் ஆத்விக், சென்னையில் அண்மையில் நடைபெற்ற 35-வது மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட இன்லைன் ஸ்பீட் பிரிவில் தங்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்தார். இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 12, 2025

கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!