News August 3, 2024
47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி, காய்கறி, மார்க்கெட், பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் எடைகற்கள் வைத்திருக்காத 17 கடைகள் என 37 வணிக நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்து நிலையங்களில் 9 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
புளியங்குடியில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

புளியங்குடியில் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமுமுக மருத்துவ அணி, சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் முகாம் நாளை (16.11.25) காலை 9 மணி முதல் 2 மணி வரை காயிதே மில்லத் பள்ளியில் நடைபெறும். 26வது வார்டு தலைவர் பரூக், தலைமையில் மமக கட்சி நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைக்கிறார். பொது மருத்துவம் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஷேர்
News November 16, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.11.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம். காவல்துறை கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தென்காசி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இணைய அழைப்பு

தென்காசி மாவட்டத்தை சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த விண்ணப்பம் அளிக்கலாம். மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியிலும், 7010591852. 9788293060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


