News April 9, 2024
450 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

தமிழ்நாடு, உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்பட 21 மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 102 தொகுதிகளுக்கான தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 450 வேட்பாளர்கள் (28%) கோடீஸ்வரர்கள் என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 252 வேட்பாளர்கள் (16%) மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
IND விளையாடிய மைதானத்தை கலாய்த்த கம்மின்ஸ்

IND VS ENG 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஸ்பால் என சொல்லி ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கி., கிரிக்கெட் போர்டை பலர் விமர்சித்து வருகின்றனர். தற்போது இப்போட்டியை பற்றி பேசிய கம்மின்ஸ், இதுபோன்ற மைதானத்தில் யார் பந்துவீச்சாளராக விரும்புவார்கள்? என நக்கலடித்துள்ளார். இங்கி., உள்ள மிக மோசமான 3-வது பிளாட் பிட்ச் என எட்ஜ்பேஸ்டன் மைதானத்தை விமர்சித்துள்ளார்.
News July 8, 2025
மழையால் சின்னாபின்னமான கூட்டுறவு வங்கி

இமாச்சலில் உள்ள துனாங் நகரில் சுமார் 8,000 வாடிக்கையாளர்கள் கொண்ட மாநில கூட்டுறவு வங்கி உள்ளது. மழை வெள்ளத்தால் இந்த வங்கியின் ஒரு கதவு அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்தது. குப்பைகள், கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம், அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
News July 8, 2025
ரஜினி பட வசனத்தை பச்சை குத்திய NZ கிரிக்கெட் வீரர்

NZ கிரிக்கெட் வீரரான ஆதித்யா அசோக் ’படையப்பா’-ல் வரும் ‘என் வழி தனி வழி’ என்ற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார். வேலூர் மாவடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 4 வயது முதல் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். தனது தாத்தா உயிரிழப்பதற்கு முன்பு அவருடன் ’படையப்பா’ படம் பார்த்ததாகவும், அவர் இறப்புக்கு பின்பு அவருக்கும் தனக்குமான நெருக்கமான உரையாடலை நினைவூட்ட பச்சை குத்தியதாகவும் தெரிவித்தார்.