News April 25, 2024
450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Similar News
News August 22, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முகையூர் வட்டாரம் ஆலம்பாடி JPM திருமண மஹால், வி.அரியலூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வெங்கந்தூர் கிராம சேவை மைய கட்டிடம், TV நல்லூர் வட்டாரத்திற்கு பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.
News August 21, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
News August 21, 2025
விழுப்புரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.