News August 8, 2024
45 வயது பெண்களை குறி வைக்கும் கொடூர சைக்கோ

உத்தரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 45 – 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 14 மாதங்களில் மட்டும் 9 பெண்கள் இதுபோல் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் வயல்வெளிகளில் வீசப்பட்டுள்ளன. கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால் குற்றவாளி சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என முடிவு செய்து, அவனை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
பணக்காரர் வன்கொடுமை செய்தால் குற்றமற்றவரா?

<<18502901>>நடிகை பலாத்கார வழக்கில்<<>> கேரள அரசின் செயல்பாட்டை பாடகி சின்மயி வரவேற்றுள்ளார். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஜாமினில் வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது பாராட்டத்தக்கது. ஒருவர் பணக்காரராக இருந்தால், தனக்கு பிடிக்காத பெண்ணை, அடியாட்களை அனுப்பி வன்கொடுமை செய்துவிட்டு, குற்றமற்றவர் என நீதி வாங்கி விட முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 9, கார்த்திகை 23 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 9, 2025
இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது: PAK தளபதி

PAK-ன் ராணுவ திறன் குறித்து இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது என அந்நாட்டு தலைமை தளபதி அசிம் முனீர் எச்சரித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கள் நடவடிக்கை வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும் எனவும், ஆபரேசன் சிந்தூர் என்பது எதிர்கால போருக்கான Case Study என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது போர்கள் சைபர், AI, குவாண்டம் கம்பியூட்டிங் என பரிணாமம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


