News April 15, 2024

4314 பேர் தபால் வாக்கு பதிவு

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2843 பேர் மற்றும் ராணுவத்தில் உள்ள 3 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2 ஆம் கட்ட பயிற்சியின் போது 1468 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மட்டும் இதுவரை 4314 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 16, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

image

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்கள், லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பாரங்கள் ஏற்றுவது வாகனத்தை பழுதாக்குவதோடு விபத்து ஏற்படவும் காரணமாகிறது. எனவே பாரங்கள் ஏற்றி செல்வது, எடையின்
அளவு குறித்த விதிகளை எப்போதும் பின்பற்றுவோம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் போலீசார் தெரிவித்தனர்.

News September 16, 2025

ஈரோடு வருகிறார் தவெக விஜய்!

image

ஈரோடு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பயணத்தின் அடுத்த கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகின்ற 04/10/2025 அன்று வரவிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரின் மக்கள் சந்திப்பிற்கு உரிய பாதுகாப்பும் அனுமதியும் வழங்குமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவிடம் ஈரோடு மாவட்ட தவெக செயலாளர் பாலாஜி தலைமையில் இன்று
(செப்.16) மனு அளிக்கப்பட்டது.

News September 16, 2025

ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!

image

சத்தியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அம்மாசை தலைமையிலான காவல்துறையினர் ஜெய்சக்திமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 4 பேர் வட்டமாக அமர்ந்து பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தை சேர்ந்த நடராஜ், முனுசாமி, ராஜா, வேலுச்சாமி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!