News January 24, 2025
அரசுப்பள்ளியில் 43 மாணவிகள் வன்கொடுமை

தஞ்சை அரசுப் பள்ளியில் 43 மாணவிகளை கணித ஆசிரியரே வன்கொடுமை செய்துள்ளதாக பாஜக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் சரியான நடவடிக்கை எடுக்காமல், இடைநீக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, “பள்ளிக்கல்வித்துறை என் ஏரியா” என வீராப்பு பேசும் அமைச்சரே, இந்த அளவிற்கு தான் தங்களது தலைமையில் அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றவா? என கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News December 6, 2025
கடனில் தத்தளிக்கும் இந்தியர்கள்!

இந்தியாவில் 28.3 கோடி பேர் கடனில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பதிலளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 2025-ல் மொத்த வீட்டு கடன் ₹15.7 லட்சம் கோடியாக உள்ளது என்று கூறிய அவர், ஒரு நபரின் சராசரி கடன் சுமை ₹3.4 லட்சத்தில் இருந்து, ₹4.8 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News December 6, 2025
வேள்பாரி பட ஹீரோ ரேஸில் 2 நடிகர்கள்

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வியால் துவண்டுள்ள ஷங்கர், மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை தேர்ந்தெடுத்துள்ளார். இதன்படி, ‘வேள்பாரி’ நாவலை படமாக எடுத்து, அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மெயின் ஹீரோவாக சூர்யா (அ) விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் பொருத்தமாக இருப்பார்கள்?
News December 6, 2025
தமிழகம் முழுவதும் நாளை வெடிக்கிறது போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அனுமதியளிக்கவில்லை. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (டிச.7) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.


