News January 24, 2025

அரசுப்பள்ளியில் 43 மாணவிகள் வன்கொடுமை

image

தஞ்சை அரசுப் பள்ளியில் 43 மாணவிகளை கணித ஆசிரியரே வன்கொடுமை செய்துள்ளதாக பாஜக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் சரியான நடவடிக்கை எடுக்காமல், இடைநீக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, “பள்ளிக்கல்வித்துறை என் ஏரியா” என வீராப்பு பேசும் அமைச்சரே, இந்த அளவிற்கு தான் தங்களது தலைமையில் அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றவா? என கேள்வி எழுப்பியுள்ளது.

Similar News

News November 26, 2025

International Roundup: ஃபிரான்ஸ் EX அதிபருக்கு சிறை

image

*ஆப்பிரிக்க நாடான கினி பிசாவ்வோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி. *ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியின் சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. *உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் ஆலோசகர்களின் தொலைபேசி அழைப்புகள் லீக்கானது. *பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

News November 26, 2025

செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

image

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.

News November 26, 2025

என்னை மட்டுமே பழி சொல்றாங்க: கம்பீர் வேதனை

image

நான் பயிற்சியாளராக நீடிக்க தகுதி உள்ளவனா, இல்லையா என்பதை BCCI தான் முடிவு செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கு இந்தியாவின் கிரிக்கெட் தான் முக்கியம், தனிமனிதன் முக்கியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு அனைத்து வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக பழி என்னில் இருந்தே தொடங்குகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!