News October 9, 2025
10th தகுதியிலான தேர்வுக்கு 42 PhD ஆய்வாளர்கள் விண்ணப்பம்

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. ம.பி.,யில் 7,500 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 10th தகுதி மட்டுமே கொண்ட இப்பணிக்கு 42 PhD ஆய்வாளர்கள், ஆயிரக்கணக்கான டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சம்பளம் ₹19,500 – ₹62,000 என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 9, 2025
BREAKING: விஜய் கட்சியுடன் கூட்டணி.. பிள்ளையார் சுழி

தவெகவுடன் கூட்டணிக்கு <<17952830>>பிள்ளையார் சுழி<<>> போடப்பட்டுவிட்டதாக EPS பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்யுடன் EPS, செல்போனில் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, திமுகவை எதிர்க்க கூட்டணியில் சேர விஜய்க்கு, EPS அழைப்பு விடுத்ததாகவும், பொங்கலுக்கு பிறகு தனது முடிவை கூறுவதாக விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பிள்ளையார் சுழி என EPS கூறியுள்ளார்.
News October 9, 2025
₹12,352 கோடி சொத்துகளுடன் பில்லியனரான ரொனால்டோ

பில்லியனர் அந்தஸ்தை எட்டிய முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையைப் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, அவரது மொத்தச் சொத்து மதிப்பு சுமார் ₹12,352 கோடியாக உள்ளது. 2002 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான போட்டிகளில் விளையாடியதன் மூலம் சுமார் ₹4,869.57 கோடி சம்பாதித்துள்ளார். மேலும் விளம்பரம், கிளப் ஒப்பந்தம் மூலம் ₹7,038 கோடி வருமானமாக ஈட்டியுள்ளார்.
News October 9, 2025
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க இதை பண்ணுங்க

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் <<17943096>>டெங்கு<<>> காய்ச்சலுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அது வராமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். *நீர் கலன்களை மூடி வைக்கவும். *பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி வாரம் ஒரு முறை நீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும். *கொசு வலைகளை பயன்படுத்தவும். *வீட்டை சுற்றி தேங்காய் ஓடுகள், டயர்கள் இருந்தால் அகற்றவும். *அதே போல செடிகள், புதர்களை அகற்றவும்.