News December 31, 2025

41 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்: CTR நிர்மல் குமார்

image

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் 3 நாள்களாக TVK நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வந்த விசாரணை இன்று நிறைவு பெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல் குமார், சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது. கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்தோம். 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

Similar News

News February 4, 2026

மோடியை புறக்கணித்தவர் அண்ணாமலை: SV சேகர்

image

வாக்கு கிடைக்காது என்பதால் மோடியின் போட்டோவை தேர்தலின்போது அண்ணாமலை பயன்படுத்தவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். பாஜகவில் பிராமணர்கள் பொறுப்பில் இருக்கக்கூடாது என நினைத்தவர் அண்ணாமலை என்றும், தான் பாஜகவைவிட்டு வெளியேற அவர்தான் காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 10 பேர் இறந்தால்தான் நமக்கு மதிப்பு கூடும் என பேசக்கூடியவர் அண்ணாமலை எனவும் அவர் சாடியுள்ளார்.

News February 4, 2026

பொன்னான நாள்.. இன்று இதை மறந்தும் செய்திடாதீர்கள்

image

இந்து சாஸ்திரங்களின் படி, புதன்கிழமை அன்று கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது *புதன்கிழமையில் யாரிடமும் கடுமையான சொற்களை பேசக் கூடாது. இதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாகலாம் *புதிய தொழில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும் *புதன்கிழமையில் கருப்பு நிற ஆடைகளை அணிந்தாலும், விநாயகரின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இதனால் வீட்டில் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்குமாம். கவனமா இருங்க!

News February 4, 2026

2026 தேர்தல்.. ரூட்டை மாற்றிய விஜய்

image

பிப்ரவரி 2-வது வாரத்தில் வேலூர் அகரம்சேரியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், போலீஸ் அனுமதி தராத காரணத்தால் விஜய்யின் பிரசார பயணம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப்.13-ம் தேதி, சேலம் மகுடஞ்சாவடியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி போலீசில் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!