News February 14, 2025

பொதுத்தேர்வு பணியில் 40,000 ஆசிரியர்கள்: அன்பில் மகேஷ்

image

தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வின் போது தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 மாணவ, மாணவியரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 பேரும் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Similar News

News September 11, 2025

இவரை கண்டுபிடிச்சு குடுங்க: லாரன்ஸ்

image

வாழ்வாதாரத்திற்காக போராடும் 80 வயது முதியவரை கண்டுபிடிக்க உதவுமாறு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மின்சார ரயிலில் முதியவர் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக அதிரசம், போளி விற்பதாக SM-ல் தகவல் பரவியது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அவரை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ₹1 லட்சம் கொடுக்க தயார் எனவும் அவருடைய விவரம் தெரிந்தவர்கள் தனக்கு தகவல் அளிக்குமாறும் லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 11, 2025

₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

image

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன. முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

News September 11, 2025

EPS மீது சிலருக்கு வயிற்றெரிச்சல்: உதயகுமார்

image

கட்சி ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சிலர் கனவு காண்பதாக ஆர்.பி.உதயகுமார் சாடினார். EPS-ன் சுற்றுப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், இப்படிப்பட்டவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026ல் EPS தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

error: Content is protected !!