News February 14, 2025

பொதுத்தேர்வு பணியில் 40,000 ஆசிரியர்கள்: அன்பில் மகேஷ்

image

தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வின் போது தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 மாணவ, மாணவியரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 பேரும் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Similar News

News February 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

News February 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 178 ▶குறள்: அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். ▶ பொருள்: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

News February 14, 2025

IPL முதல் போட்டி எப்போது, ​​யாருக்கு இடையே நடக்கும்?

image

இந்த ஆண்டுக்கான IPL அட்டவணை குறித்த முக்கிய விவரங்களை Cricbuzz இணையதளம் வெளியிட்டுள்ளது. “BCCI தரவுப்படி, முதல் போட்டி KKR மற்றும் RCB இடையே மார்ச் 22 (சனிக்கிழமை) அன்று ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான சன்ரைசர்ஸ் அடுத்தநாள் பிற்பகல் உப்பலில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
இறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!