News August 10, 2024
400 கோழி, 55 ஆடு பலியிட்டு 2 நாள் கறி விருந்து

மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.
Similar News
News November 5, 2025
மேலூரில் பொது பணித் துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொது பணி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
News November 4, 2025
மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.


