News August 10, 2024

400 கோழி, 55 ஆடு பலியிட்டு 2 நாள் கறி விருந்து

image

மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.

Similar News

News November 25, 2025

மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

image

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 25, 2025

மதுரை: 25 கிலோ சைக்கிளை பற்களால் துாக்கி சாதனை

image

சிவரக்கோட்டை முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தகுமார் 45. பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார். சிறு வயது முதலே பற்களால் சைக்கிளை துாக்கி நின்றவாறு சாகச முயற்சியில் ஈடுபட்டார்.தற்போது 25 கிலோ எடை கொண்ட சைக்கிளை பற்களால் துாக்கியபடி 100 மீட்டர் துாரம் நடந்து சென்று சாதனை படைத்தார். அடுத்து 200 மீட்டர் துாக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

News November 25, 2025

மதுரை: மீன் பிடிக்க சென்ற முதியவர் பரிதாப பலி

image

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!