News July 16, 2024
40அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

குலசேகரம் நிலைய எல்லைக்கு உட்பட்ட உண்ணியூர் கோணம் கொல்விளை என்ற இடத்தில் சுமார் 40அடி ஆழ கிணற்றில் 16 வயது சிறுவன் விழுந்துள்ளார். தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வீரர்கள் உபகரணங்கள் பயன்படுத்தி சிறுவனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார்.
Similar News
News November 9, 2025
குமரி: விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

திற்பரப்பு பழைய பாலம் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நவ.5-ம் தேதி வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது மோதியுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிட்சை பலனளிக்காமல் இன்று (நவ.8) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: இளம் பெண் தற்கொலை

கீழமறவன் குடியிருப்பு டெம்போ டிரைவர் செல்வசரண் மற்றும் ரேஷ்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். கடந்த நவ.6ம்தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து கோட்டார் போலீசார் விசாரணை.
News November 8, 2025
குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.


