News July 16, 2024

40அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

image

குலசேகரம் நிலைய எல்லைக்கு உட்பட்ட உண்ணியூர் கோணம் கொல்விளை என்ற இடத்தில் சுமார் 40அடி ஆழ கிணற்றில் 16 வயது சிறுவன் விழுந்துள்ளார். தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வீரர்கள் உபகரணங்கள் பயன்படுத்தி சிறுவனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார்.

Similar News

News August 20, 2025

துபாயில் கைது செய்யப்பட்ட குமரி மீனவரை மீட்க குடும்பத்தினர் மனு

image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனையை சேர்ந்த அருள்ரீகன்(43) துபாயில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில், ரஷ்ய நாட்டு நபர் ஒரு படகை கடத்திய வழக்கில், தொடர்பில்லாமலே அருள்ரீகன் உடந்தையாக செயல்பட்டார் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கணவரை மீட்டுத் தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

News August 20, 2025

குமரி: கூட்டு பட்டாவை, தனி பட்டாவாக மாற்றனுமா? SIMPLE..!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற<> இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 20, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 20) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.61 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.30 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.68 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.79 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 648 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

error: Content is protected !!