News April 25, 2025

26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

image

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Similar News

News November 20, 2025

பாம்பை கடித்த கொசு PHOTOS

image

கொசு நம் மீது அமர்ந்து கடிப்பதை பார்த்திருப்போம். அதே கொசு, வேறுஏதாவது விலங்கை கடித்து பார்த்து இருக்கீங்களா? கோஸ்டாரிகாவில் போத்ரோப்ஸ் ஆஸ்பர் என்ற பாம்பின் தலையில் ஏறி கடித்திருக்கிறது. இந்த அரிய தருணத்தை, வனவிலங்கு புகைப்படக் கலைஞர் படம்பிடித்துள்ளார். மேலே, இதன் போட்டோஸை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 20, 2025

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிய பிற மொழி படங்கள்

image

தமிழ் படங்களை கடந்து பிற மொழி படங்களுக்கும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதில், சில திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஹிட் அடித்ததுடன், அதிக வசூலையும் அள்ளி குவிந்துள்ளன. அவை என்னென்ன படங்கள், எவ்வளவு வசூல் செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களை ஆச்சரியப்படுத்திய படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE

News November 20, 2025

நேற்று முளைத்த காளான் (விஜய்): பிரேமலதா

image

நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் ஆட்சியமைக்க ஆசைப்படுகின்றன என்று விஜய்யை பிரேமலதா மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் விரும்பும் கூட்டணியாக தான் தேமுதிக 2026 தேர்தலில் வெற்றி பெறும் என்றும் கூறினார். சமீப காலமாக, பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகியோர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!