News April 25, 2025
26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Similar News
News October 23, 2025
PM மோடி பங்கேற்காதது ஏன்? மலேசிய PM விளக்கம்

தீபாவளி காரணமாகவே PM மோடி ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மோடியின் முடிவை மதிப்பதாக கூறிய அவர், PM மோடி காணொலி மூலம் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காணொலி மூலம் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள PM மோடி, ஆசியான் – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளதாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News October 23, 2025
பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… கையை பாருங்க

உ.பி.,யின் நொய்டாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் பச்சிளம் குழந்தைக்கு கொடுத்த தவறான சிகிச்சையால், கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவறான ஊசி தான் காரணம் என்றும், இதுபற்றி ஹாஸ்பிடலில் கூறியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதை விசாரிக்க 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இம்மாதிரியான மருத்துவ தவறுகளை எப்படி தடுப்பது?
News October 23, 2025
FLASH: முடிவை மாற்றினார் விஜய்

கரூர் சம்பவத்துக்கு, விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜெ., பாணியில் தன்னுடைய பிரசாரத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக ஒரு நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.