News April 25, 2025
26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Similar News
News December 7, 2025
கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

தவெக கூட்டணியில் TTV, OPS இணைவார்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய KAS, இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என TTV, OPS-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் TTV, OPS உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 7, 2025
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் Ex அமைச்சர் செல்லையா ராஜதுரை(98) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் MP-யாக இருந்துள்ளார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய இவர் MGR, சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். #RIP
News December 7, 2025
SIR படிவம் கொடுத்தவர்களின் கவனத்திற்கு..

SIR படிவம் கொடுத்தாச்சு, நம்ம வேலை முடிஞ்சுது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். உங்க படிவத்தை SIR அலுவலர், ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறாரா என்பதை செக் பண்ணுங்க. அதற்கு, <


