News April 25, 2025

26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

image

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Similar News

News November 22, 2025

FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

2 நாள்களாக குறைந்த தங்கம் விலை இன்று, ஒரேநாளில் சவரனுக்கு ₹1,360 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், 1 சவரன் ₹93,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இந்த வாரம் சரிவை சந்தித்துள்ளது. கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1.72 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

News November 22, 2025

தட்டி தூக்கிய தங்க மகள்கள் PHOTOS

image

2025 உலக குத்துச்சண்டை கோப்பை பதக்கப்பட்டியலில், இந்தியா, 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில், பெண்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர். இந்த சாதனை, நாட்டில் பெண்கள் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. மேலே தங்கம் வென்ற பெண்கள் யார் என்று போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 22, 2025

தாக்குதலுக்கு 2 ஆண்டுகளாக தயாரான தீவிரவாதிகள்

image

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!