News April 25, 2025

26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

image

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Similar News

News April 25, 2025

அதிமுக மூத்த தலைவர் மறைவு… இபிஎஸ் இரங்கல்

image

உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சந்திரசேகர் ஆன்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். #RIP

News April 25, 2025

பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவினோம்.. PAK ஒப்புதல்

image

பயங்கரவாத இயக்கங்களுக்கும் PAK-க்கும் உள்ள தொடர்பை, அதன் பாதுகாப்பு அமைச்சரே போட்டு உடைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் PAK-க்கு பங்கிருக்கிறது என IND குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில், ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், PAK கடந்த 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது என அமைச்சர் கவாஜா ஒப்புக்கொண்டுள்ளார். USA, மேற்குலக நாடுகளுக்காகவே PAK இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.

News April 25, 2025

துணை ராணுவப் படையினர் விடுமுறை ரத்து

image

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்தியா-பாக் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதை கருத்தில் வைத்து துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவு அனுப்பியுள்ளனர். அதில் உடனே பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!