News April 25, 2025
26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Similar News
News December 3, 2025
தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.
News December 3, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கு ஹேப்பி நியூஸ்

சென்னை போன்ற பெருநகரங்களில் அட்வான்ஸ் தொகையை கேட்டாலே கிறுகிறுக்கும். இந்நிலையில், வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி இனி 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தாலே போதுமானது. அதேபோல், குடியேறிய 12 மாதங்களுக்கு பிறகே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், அதனை 30 நாள்களுக்குள் உரிமையாளர் சரி செய்து கொடுக்க வேண்டும். இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
News December 3, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு கருணாநிதியே Role Model: CM

மாற்றுத்திறனாளிகள் கருணாநிதியை Role Model-ஆக கருத வேண்டும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு விபத்துக்கு பிறகு கருணாநிதிக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதை பொருட்படுத்தாமல் வரலாற்று சிறப்புமிக்க பல அறிக்கைகளை அவர் வெளியிட்டார் என பகிர்ந்துள்ளார். மேலும், கருணாநிதி வீல் சேரிலேயே அமர்ந்திருந்த போதிலும் பம்பரமாக சுழன்று மக்களுக்காக பணி செய்தார் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.


