News January 19, 2025

ஒரே மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை

image

இந்த ஆண்டு தொடங்கி, ராஜஸ்தான் கோட்டா நகரத்தில் 4ஆவது மாணவர் தற்கொலை பதிவாகியுள்ளது. கோட்டாவில் தங்கி NEET பயிற்சி பெற்றுவந்த 17 வயது மாணவன் ஒருவன் நேற்று தற்கொலை செய்துகொண்டான். நீட் தேர்வுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 20 நாட்களுக்குள் நீட் பயிற்சி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

Similar News

News March 5, 2026

ஃபைனலுக்கு முன்னேறுமா இந்திய அணி?

image

டி20 WC இரண்டாவது அரையிறுதியில், இன்று ENG Vs ING அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இந்தியா வலுவாக திகழ்ந்தாலும் அபிஷேக்கின் ஃபார்ம், மோசமான பீல்டிங் கவலையை தருகிறது. மறுபுறம், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சால்ட், புரூக்(C), வில் ஜாக்ஸ் & பந்துவீச்சில் அடில் ரஷித், ஆர்ச்சரை பெருமளவு நம்பியிருக்கிறது. வான்கடேவில் Dew-வின் தாக்கம் காரணமாக சேஸ் செய்வது நல்லது. யார் வெல்வார்கள்? உங்க கணிப்பு

News March 5, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 5, மாசி 21 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

News March 5, 2026

கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

image

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும், கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால், அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறி விடுமாம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!