News August 3, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது

image

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 2 நாள்களுக்கு முன் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமி, இலங்கை படையின் ரோந்து படகு மோதி பலியானார். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 பேரை தற்போது, எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 8, 2025

BREAKING: இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி

image

அதிமுக பொதுச்செயலாளராக EPS தேர்வானதை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில், SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக பொதுக்குழுவால் EPS தேர்வானதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார். பொதுச்செயலாளர் வழக்கு முடிந்துவிட்டதாக நினைத்திருந்த EPS-க்கு, மேல்முறையீடு மீண்டும் தலைவலியை தந்துள்ளது.

News December 8, 2025

சண்டை போடாதீங்க கம்பீர்.. Ex. வீரரின் அட்வைஸ்!

image

SA ODI தொடருக்கு பின் நடந்த பிரஸ் மீட்டில் இந்திய அணியின் கோச் கம்பீர், சரவெடியாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்படி ஒருவரை விமர்சிப்பது, கம்பீர் தன் மீதான விமர்சனத்திற்கு இடமளிப்பது போல் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். டீம் தோற்றால் அதற்கு கம்பீரை மட்டுமே குறை சொல்ல முடியாது என கூறிய அவர், இத்தனை சண்டைகளில் கம்பீர் ஈடுபட வேண்டியதில்லை எனவும் அட்வைஸ் செய்தார்.

News December 8, 2025

நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

image

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!