News August 3, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது

image

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 2 நாள்களுக்கு முன் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமி, இலங்கை படையின் ரோந்து படகு மோதி பலியானார். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 பேரை தற்போது, எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 26, 2025

செங்கோட்டையனுக்கு விஜய் கட்சியில் முக்கிய பதவி!

image

தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.

News November 26, 2025

நகை திருட்டு வழக்குகளில் இழப்பீடு தர அரசுக்கு உத்தரவு

image

2022-ல் கொள்ளை வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கோரி, ஒருவர் மதுரை HC-ல் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, திருட்டு வழக்குகள் மீதான போலீஸின் மெத்தனமான போக்கையே இது காட்டுவதாக சாடியது. திருடுபோன பொருளின் மதிப்பில் 30%-ஐ மாநில அரசு தரவும் HC உத்தரவிட்டது. ஒருவேளை காணாமல் போன பொருள்கள் மீட்கப்பட்டால், இந்த இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் HC தெரிவித்துள்ளது.

News November 26, 2025

கலாசாரத்தை சிதைக்கும் மார்க்ஸியவாதிகள்: RN ரவி

image

கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் சிதைப்பதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியர்கள் பசுவையும், குரங்கையும் வழிபடுவதால், ஏகாதிபத்தியம் அவர்களுக்கு தேவை என கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய வரலாற்றை தேடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!