News August 3, 2024
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 2 நாள்களுக்கு முன் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமி, இலங்கை படையின் ரோந்து படகு மோதி பலியானார். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 பேரை தற்போது, எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 18, 2025
சாதிக்காக கொல்லாமல் சாதியை கொல்லுங்கள்: சீமான்

விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால்தான், ஆணவக் கொலைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். சாதிக்காக கொலை செய்யாமல், சாதியை கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுத்ததாகவும், ஆனால், இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 18, 2025
National Roundup: PM மோடியை சந்தித்த எகிப்து அமைச்சர்

*கடந்த 75 மணி நேரத்தில் 303 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி அறிவிப்பு. *நிதி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை நாடு கடத்த பெல்ஜியம் அனுமதி.*ஜம்மு & காஷ்மிர் CM-ஆக உமர் அப்துல்லா ஒரு ஆண்டை நிறைவு செய்தார். *இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்தர் அப்தெலாட்டி PM மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை. *லடாக்கின் லே மாவட்டத்தில் பொதுவெளியில் மக்கள் கூட மீண்டும் கட்டுப்பாடு.
News October 18, 2025
அக்டோபர் 18: வரலாற்றில் இன்று

*1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது. *1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது. *1931 – விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் இறந்தநாள். *1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது. *2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். *1978 – நடிகை ஜோதிகா பிறந்தநாள்.