News March 31, 2025
இருவேறு விபத்துகளில் 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தனர். மாயதேவன்பட்டி விலக்கில் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் (46), அவரது மகள் சுமித்ரா (18) இருவரும் ஆட்டோவில் செல்லும்போது விபத்தில் சிக்கினர். அதேபோல, அவினாசி அருகே பைக் மீது கார் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதியினர் உயிரிழந்தனர்.
Similar News
News January 21, 2026
சாப்பிடும்போது பேசுகிறீர்களா? இது உங்களுக்குதான்!

சாப்பிடும்போது பேசுவது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய் வழியாக வயிற்றில் அதிகப்படியான காற்று நுழைவது ஏப்பம் மற்றும் வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். உணவு, உணவுக்குழாயில் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று கடுமையான இருமலை ஏற்படலாம். சரியாக மெல்லாததால், செரிமான சாறுகள் உணவில் கலக்காமல், அமிலத்தன்மை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
News January 21, 2026
TCL உடன் கைகோர்த்த சோனி

சோனி தனது டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவை மேம்படுத்த சீன நிறுவனம் TCl உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதில் TCL 51% பங்கையும், சோனி 49% பங்கையும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் முயற்சியின் மூலம் Sony Bravia டிவி தயாரிப்பு, விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளை உலகமெங்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News January 21, 2026
ஜனவரி 21: வரலாற்றில் இன்று

*1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மறைந்தார். *1945 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார். *1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. *2009 – செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. *2017 – தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் உச்சத்தை எட்டியது.


