News April 12, 2025
ஆட்டை பலி கொடுக்க போன இடத்தில் 4 பேர் பலி!

இதை சோகம் என்பதா? அதிசயம் என்பதா? ம.பி.யில் மத சடங்கிற்காக, ஆட்டை பலி கொடுக்க 6 பேர் காரில் வேகமாக சென்றுள்ளனர். சாவை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த ஆட்டை விதி காப்பாற்றியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஆடுக்கு ஒன்றும் ஆகவில்லை. விதி வலியது!
Similar News
News December 2, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.2) சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹30 குறைந்து ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனையாகிறது. இந்திய சந்தையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவால் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹196-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,96,000-க்கும் விற்பனையாகிறது.
News December 2, 2025
FLASH: ஆட்டம் காட்டும் பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் நேற்று போலவே இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 332 புள்ளிகள் சரிந்து 85,308 புள்ளிகளிலும், நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 26,077 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ICICI Bank, Bajaj Finserv, Axis Bank, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 12% வரை குறைந்துள்ளது.
News December 2, 2025
2026 தேர்தலுக்கு பிரேமலதா போடும் புது ரூட்டு

தேமுதிக தொண்டர்களை உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பதே தனது ஆசை என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் எனக் கூறி வரும் அவர், கட்சிக்காக உழைத்த புது முகங்களை வேட்பாளர்களாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் என்ற பிம்பம் உடையும் எனவும் பிரேமலதா நம்புவதாக கூறப்படுகிறது.


