News April 12, 2025

ஆட்டை பலி கொடுக்க போன இடத்தில் 4 பேர் பலி!

image

இதை சோகம் என்பதா? அதிசயம் என்பதா? ம.பி.யில் மத சடங்கிற்காக, ஆட்டை பலி கொடுக்க 6 பேர் காரில் வேகமாக சென்றுள்ளனர். சாவை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த ஆட்டை விதி காப்பாற்றியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஆடுக்கு ஒன்றும் ஆகவில்லை. விதி வலியது!

Similar News

News November 20, 2025

சேலத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறாரா விஜய்?

image

கரூர் அசம்பாவிதத்திற்கு பின் விஜய் தனது பரப்புரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவர் சேலத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்ட வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த இடத்தில் பொதுக்கூட்டம், போலீஸ் அனுமதி உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசித்து விரைவில் விஜய் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 20, 2025

அன்புமணியின் பேச்சு குழந்தைத்தனமானது: TRB ராஜா

image

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய்சொல்வதாக அன்புமணி வைத்த குற்றச்சாட்டுக்கு TRB ராஜா பதில் அளித்துள்ளார். அதில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் தரவுகளின்படி, வேகமாக வளர்த்து வரும் மாநிலமாக TN அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News November 20, 2025

தாயின் depression குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்குமா?

image

கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அது குழந்தைக்கு பாதிப்பை எற்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், தாயின் மன அழுத்தத்தினால் குழந்தையின் பாலினத்திற்கும் தொடர்புள்ளதாக நியூயார்க்கில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிக மன அழுத்தம் இருந்தால் பெண் குழந்தையும், அதுவே குறைவாக இருந்தா ஆண் குழந்தையும் பிறக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!