News September 24, 2025
மோசடி வழக்கில் சூர்யா வீட்டு பணி பெண் உட்பட 4 பேர் கைது

நடிகர் சூரியாவுக்கு 2021-ம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக உள்ளவர் அந்தோணி. இவர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனாவின் மகன் நடத்தும் தங்க நாணயம் திட்டத்தில் ₹50 லட்சம் வரை டெபாசிட் செய்து ஏமாந்துள்ளார். ₹50 லட்சத்தில் ₹7 லட்சம் மட்டுமே அந்தோணிக்கு திரும்ப கிடைத்ததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுலோச்சனா, அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 24, 2025
விலை குறைத்த அத்யாவசிய பொருள்கள்

GST வரி குறைப்பால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதில் சிலவற்றின் விலை பட்டியல் இதோ: அமுல் வெண்ணெய்(₹4 – ₹58வரை ), அமுல் நெய் (₹40 – ₹610), Maggi (₹4 600G), Nescafe(₹30), Sunfest marie light (₹20), nutella (₹5- ₹399), டாபர் ஜூஸ் (₹8) உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளது. அதேபோல் ஹார்லிக்ஸ், கிஷான் ஜாம், ப்ரூ காபி உள்ளிட்டவையின் விலையும் குறைந்துள்ளது.
News September 24, 2025
தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்தின் உரிமை: ஐநா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரெஸ் உரையாற்றினார். அதில் தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும் என கூறிய அவர், 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
News September 24, 2025
சிவாஜி கணேசன் பொன்மொழிகள்

*வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் விளைவு
*கலை என்பது மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி
*மக்களின் கைதட்டல்கள்தான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது
*வாழ்க்கை ஒரு நாடகம், அதில் நாம் அனைவரும் நடிகர்கள்
*ஒரு நடிகன் என்பவன், சமூகத்தில் நடப்பவற்றை அவனுடைய நடிப்பின் மூலம் பிரதிபலிப்பவன்