News May 4, 2024

கூட்டு பாலியல், கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு

image

ஹரியானா மாநிலம் நூவா கூட்டு பாலியல் வன்கொடுமை, இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016இல் சிறுமி உள்ளிட்ட 2 பெண்கள் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கணவர், மனைவி உயிரிழந்த நிலையில், சிபிஐ விசாரித்து 4 பேரை கைது செய்தது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News August 19, 2025

முதல் ரூபாய் நோட்டை பாத்திருக்கீங்களா?

image

இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-ல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-ல் ₹5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ₹10, ₹100, ₹1,000, ₹10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. நீங்க பார்த்த பழைய ரூபாய் நோட்டு எது?

News August 19, 2025

இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் CEO பொறுப்பு?

image

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தையை போல் சினிமா தயாரிப்பில் கால்பதிக்கும் அவர், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், இன்பநிதிக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

News August 19, 2025

அரசியலமைப்பை மதிக்கும் வேட்பாளர்: கனிமொழி

image

RSS-யை சேர்ந்த ஒருவரை எதிர்க்கும் வகையில், சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளதாக கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர் எனவும் அவர்கள்(NDA) தேர்வு செய்த வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும் என்றார். இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் எனவும், TN-யை சேர்ந்தவர் வேட்பாளர் என்பதால் BJP-க்கு நம் மீது அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது என்றும் கூறினார்.

error: Content is protected !!