News March 19, 2024

கோர விபத்தில் 4 பேர் பலி

image

திருநெல்வேலியில் இருந்து சென்ற டெம்போ டிராவலர் வாகனம் கேரளாவின் மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து இடுக்கிக்கு சுற்றுலாவுக்காக 20 பேருடன் சென்ற வாகனம், அடிமாலி அருகே சென்று கொண்டிருக்கும்போது மலையில் இருந்து கவிழ்ந்தது. இதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 8, கார்த்திகை 22 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 1.45 PM – 2.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9.15 AM – 10:15 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News December 8, 2025

சனாதன தர்மம் மூடநம்பிக்கை அல்ல அறிவியல்: PK

image

தமிழகத்தில் இந்துக்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்ற கூட சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக <<18482516>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இந்துக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சனாதன தர்மம் என்பது மூடநம்பிக்கை இல்லை, ஆன்மிக அறிவியல். அதேபோல், பகவத் கீதை என்பது பிராந்திய, மத நோக்கம் இல்லாதது. ஒவ்வொரு இளைஞரும் அதை படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

தோனியால் மட்டுமே இது சாத்தியம்: முரளி விஜய்

image

தோனி இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என EX இந்திய வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். தோனி இயற்கையானவர், தனித்துவம் மிக்க தலைவர். 2007 T20 WC-ல் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை வீச சொன்னது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த முடிவுகளை அவரால் மட்டுமே எடுக்க முடியும். அவரை போல வேறு எந்த வலதுகை பேட்ஸ்மேனாலும், மிகப்பெரிய சிக்ஸர் ஷாட்களை அடிக்க முடியாது என்றும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!