News August 2, 2024

ஆட்டிறைச்சி சாப்பிட்ட 4 பேர் பலி

image

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்து வாங்கிவந்த இறைச்சியை குடும்பமாக சேர்ந்து அவர்கள் சமைத்து உண்டனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், போகும் வழியிலேயே அனைவரும் உயிரிழந்தனர்.

Similar News

News August 16, 2025

750 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். Share it.

News August 16, 2025

அதிமுகவில் இணையும் OPS? மழுப்பி மாட்டிய அமைச்சர்..

image

OPS வேண்டாம் என ஒற்றைக் காலில் நிற்கிறார் இபிஎஸ். BJP-யோ இருவரையும் இணைக்க முயற்சி செய்து வருவதாக பேசப்பட்டது. இதுகுறித்து RB.உதயகுமாரிடம் கேட்டபோது, “சிதறு தேங்காயை போல சிதறிய காலமும் உண்டு, பிறகு சேர்ந்து ஆட்சியமைத்த காலமும் உண்டு. எனக்கு ஜோசியம் தெரியாது. Wait and see” என மழுப்பிவிட்டு நகர்ந்தார். இதனால் OPS விவகாரத்தில் BJP-யின் பேச்சை EPS கேட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

News August 16, 2025

இப்படியே போனா எப்பிடி? கட்டணத்தை உயர்த்திய SWIGGY..

image

ஆன்லைன் டெலிவரி செயலிகளில் உணவின் விலை அதிகமாக இருப்பதாக பலர் புலம்புகின்றனர். இந்நிலையில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹2 உயர்த்தியுள்ளது SWIGGY. 2023-ல் ₹2-ஆக இருந்த கட்டணத்தை 2024-ல் ₹10-ஆக உயர்த்தி, தற்போது ₹14 வரை உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளில் பிளாட்ஃபார்ம் கட்டணம் மட்டுமே 600% உயர்ந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உணவு டெலிவரி செய்யும் செயலியை தெரிந்துகொள்ள வேண்டுமா? <<17424295>>க்ளிக் பண்ணுங்க.<<>>

error: Content is protected !!