News February 10, 2025
திருப்பதி லட்டு கலப்பட நெய் புகாரில் 4 பேர் கைது

திருப்பதி பிரசாத லட்டுகளில் கலப்பட நெய் விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில், TTDக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களுடன் தொடா்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூா்வா சாவ்டா, ராஜசேகரன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டெண்டரை பெற தமிழகத்தை சேர்ந்த ஒரு டெய்ரி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
Similar News
News March 3, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

புத்தகப் பையை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சிவகங்கையில் +1 மாணவியை கிஷோர் என்ற சிறுவன், பிரவீன், சாமியார் ராமநாதன் ஆகிய 3 பேரும் ரேப் செய்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஹாஸ்பிடல் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளான்.
News March 3, 2026
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

வருமான வரி விதிகளின்படி, வீட்டில் குறிப்பிட்ட அளவு நகைகளை மட்டுமே வைத்திருக்க முடியும். *திருமணமான பெண் – 500 கிராம். *திருமணமாகாத பெண் – 250 கிராம். ஆண்கள்( திருமணமானவர்கள்/ திருமணமாகாதவர்கள்) – 100 கிராம். இந்த வரம்பிற்கு மேல் நீங்கள் தங்க நகைகளை வைத்திருந்தால், வருமான வரி சோதனையின்போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லையெனில் நகைகள் பறிமுதல் செய்யப்படும். SHARE IT
News March 3, 2026
BREAKING: விஜய் அறிவித்தார்

நாளை தஞ்சையில் நடக்கும் தவெகவின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு QR அனுமதி சீட்டு பெற்றவர்கள்(4,900 பேர்) மட்டுமே வரவேண்டும் என விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் கூட்டத்திற்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


