News March 20, 2025

ஒரே நாளில் 4 கொலைகள்: பேரவையில் இபிஎஸ் ஆவேசம்

image

TNல் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை செயலற்றதாகிவிட்டதாகவும் அவர் சாடினார். குடும்பத் தகராறு, முன்விரோதம் காரணமாகவே கொலைகள் நடந்ததாக CM ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Similar News

News March 21, 2025

ராசி பலன்கள் (21.03.2025)

image

➤மேஷம் – சிக்கல் ➤ரிஷபம் – ஆதரவு ➤மிதுனம் – பணிவு ➤கடகம் – தோல்வி ➤சிம்மம் – பயம் ➤கன்னி – செலவு ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – கவலை ➤தனுசு – வெற்றி ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நன்மை ➤மீனம் – பயம்.

News March 21, 2025

இந்தியாவுக்கு தனி பிரவுசர்.. சூப்பர் மேட்டர் ஆச்சே

image

பயனாளர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிற்கு தனி பிரவுசரை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலர் பங்கேற்றனர். நமது நாட்டின் பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட பிரவுசர் என்பதால், நமது குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

உண்ணாவிரத போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். சேப்பாக்கம் எழிலகம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். 2021இல் அரசு ஊழியர்களுக்கு திமுக அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

error: Content is protected !!