News March 20, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

image

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 27, 2025

சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.

News November 27, 2025

ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

image

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.

News November 27, 2025

ராமதாஸ் கையில் அதிகாரங்கள்: ஸ்ரீகாந்தி

image

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!