News March 20, 2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கியுள்ளன. தகுதியுள்ள மாணவர்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது சான்று நகல், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு 18 வயது வரை தமிழக அரசு மாதம் ₹2,000 வழங்க உள்ளது.
News November 21, 2025
கூட்டணி பேச்சுவார்த்தை: காங்., குழு அமைப்பு?

2026 தேர்தலில் திமுக – காங்., கூட்டணி உறுதியான நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்., தலைமை குழு அமைத்துள்ளதாம். கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18 இடங்களில் வென்றது. 2026-ல் காங்., எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?
News November 21, 2025
முடியாததை முடித்துகாட்டிய நாடுகள்

மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான திட்டங்களை பல வருடங்களாக செயல்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகளுக்கு மத்தியில் சில நாடுகள் அசால்ட்டாக செய்து முடித்துள்ளன. இந்த நாடுகள், தைரியமான முடிவுகளை உறுதியாக கடைபிடித்ததன் மூலம் வெற்றியடைந்துள்ளன. அவை, எந்தெந்த நாடுகள், என்னென்ன செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


