News March 20, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

image

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

127 கிலோ தங்கத்தை கடத்திய தமிழ் பட நடிகை!

image

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரன்யா ராவ். இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் DRI, ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில், அவர் மொத்தமாக 127 கிலோ தங்கத்தை கடத்திய அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

News November 22, 2025

வெள்ளி விலை ₹3,000 உயர்ந்தது

image

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.22) கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. கிராம் ₹172-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,72,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில்(நவ.17) கிலோ ₹1,73,000-க்கு விற்பனையான வெள்ளி வார இறுதி நாளான இன்று ₹1,000 குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இதே விலை நீடிக்கும்.

News November 22, 2025

பனையூரை ஃபோகஸ் செய்யும் அமித்ஷா.. பின்னணி என்ன?

image

அமித்ஷா டிசம்பர் இறுதிக்குள் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விசிட்டில் கூட்டணி, சீட் ஷேரிங் பற்றி இறுதி செய்வதோடு, தவெக தரப்பிடம் கூட்டணி பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 3 நாள்கள் சென்னையிலேயே அவர் முகாமிட ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். அமித்ஷா பேச்சுவார்தை நடத்தினால், விஜய் கூட்டணிக்கு பிடிகொடுப்பாரா?

error: Content is protected !!