News March 20, 2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
அரசியலில் அற்புத தலைவர் அண்ணா: விஜய்

குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா என அவரது 117-வது பிறந்தநாளையொட்டி விஜய் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். ‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தை பின்பற்றி, 1967 அரசியல் மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News September 15, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.15) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,210-க்கும், சவரன் ₹81,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹143-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,43,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில்(திங்கள்கிழமை) ஏறு முகத்துடன் தொடங்கிய தங்கம் இந்த வாரத்தில் இறங்குமுகத்துடன் தொடங்கியுள்ளது.
News September 15, 2025
தமிழகத்தில் 8 நாள்களுக்கு மழை: IMD

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் 17-ம் தேதி கனமழை பெய்யும் என IMD கூறியுள்ளது. இதனால் குடையை ரெடியா வையுங்க மக்களே..!