News June 17, 2024

4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

image

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சைபாசா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

நீங்கள் வேலையில் நீடிக்க இதை செய்தே ஆக வேண்டும்!

image

எதிர்காலத்தில் ஒருவர் வேலையில் இருப்பது மிக சவாலான காரியம் என நோபல் பரிசு பெற்றவரும், DEEP MIND-ன் CEO-வுமான டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் AI மேம்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் நீடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

இடையூறுகளை தாண்ட வேண்டும்: பிரேமலதா

image

தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் விதிக்காத நிபந்தனைகளை, தவெகவுக்கு விதித்ததாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதுபோன்ற பல இடையூறுகள், சவால்களை தாண்டித்தான் இலக்கை அடைய முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தபோதே விஜயகாந்தும் அரசியலுக்குள் நுழைந்து பல தடைகளை தாண்டியவர் என்றும் கூறியுள்ளார்.

News September 13, 2025

BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

image

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!