News March 14, 2025

சென்னையில் 4 வழித்தட உயர்மட்ட சாலை!

image

சென்னை ECR சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ தூரத்திற்கு ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

கடிதம் எழுதிவிட்டு தூங்க சென்றுவிடுவார் CM: விஜய்

image

மீனவர்கள் கைது செய்யப்பட்டால் PM-க்கு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்.

News March 4, 2026

கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து… புதிய தேர்தல் அறிவிப்பு

image

மத்திய, மாநில அரசு வேலைகளில் இல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளின் மருத்துவம் பொறியியல் உள்பட அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

News March 4, 2026

கருணாநிதியால் கூட இதை செய்ய முடியல: விஜய்

image

தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என விஜய் பேசியுள்ளார். திமுகவை தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சிக்கு கொண்டுவர கருணாநிதியால் கூட முடியவில்லை என்ற அவர், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரிந்தே திமுக வாக்கு கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மோசடி ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சி; முக்கியமான ஆட்சி என திமுக அரசு மீது விஜய் விமர்சனம் வைத்துள்ளார்.

error: Content is protected !!