News April 1, 2024

புயலில் சிக்கி 4 பேர் பலி; 100 பேர் படுகாயம்

image

மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரியில் வீசிய கடும் புயலில், 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Similar News

News November 9, 2025

திமுகவினர் ஒப்பாரி வைக்கின்றனர்: RB உதயகுமார்

image

திமுகவை எதிர்ப்பில் அதிமுக ஒருபோதும் பின்வாங்கியதில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுகவில் தற்போது அமைச்சராக இருக்கும் பலர் EX-அதிமுகவினர் என்றும், KKSSR, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என திமுகவுக்கு சென்றவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதாகவும் அவர் பேசியுள்ளார். இதனால், ஏற்கெனவே திமுகவில் இருப்பவர்கள், தங்களுக்கு பதவி கிடைப்பதில்லை என ஒப்பாரி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 9, 2025

இரவில் நடப்பதற்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகள்

image

இரவில் நடப்பதற்கு பாதுகாப்பான நாடுகள் எவை என உங்களுக்கு தெரியுமா? இது தொடர்பாக Gallup நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது இரவு நேர குற்றங்களை வைத்து மட்டும் உருவாக்கப்பட்டதல்ல, எந்த அளவிற்கு தைரியத்தோடு மக்கள் நடக்கின்றனர் என்பதையும் சேர்த்தது. இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. டாப் 10 நாடுகளின், விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.

News November 9, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்!

image

*வாழ்க்கையில் முக்கியமான ஒரே விடயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து மட்டுமே. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.

error: Content is protected !!