News April 27, 2025
வெடி விபத்தில் 4 பேர் பலி: ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News October 30, 2025
PAK எல்லையில் இந்திய முப்படைகள் பயிற்சி

பாகிஸ்தான் எல்லையில் இந்திய முப்படைகள் ‘திரிசூல்’ பயிற்சியை தொடங்கியுள்ளன. குஜராத் – ராஜஸ்தான் இடையே, குறிப்பாக ரான் ஆஃப் கட்ச் பகுதியில் 12 நாள்கள் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நிலையில், இந்திய ராணுவம் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 30, 2025
Train-ல் பொது பெட்டிகள் முதல்/கடைசியில் இருப்பது ஏன்?

ஸ்லீப்பர் (அ) AC பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டது என்பதால் அதில் அதிக கூட்டம் இருக்காது. ஆனால் General Compartment அப்படி இல்லை. அதிக கூட்டம் இருக்கும். இப்படி அதிக கூட்டம் இருக்கும் பெட்டிகள் நடுவில் இருந்தால், சமநிலையற்ற எடையால் ரயில் வேகமாக செல்லும்போது அசம்பாவிதம் நிகழலாம். அதனால்தான் General Compartment-கள் முதலிலும், கடைசியிலும் வைக்கப்பட்டுள்ளது. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE.
News October 30, 2025
BREAKING: செங்கோட்டையன் முடிவை அறிவித்தார்

கட்சியிலிருந்து தன்னை நீக்கினால் மகிழ்ச்சி என செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, பசும்பொன்னில் OPS, சசிகலா, டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். இது தொடர்பாக <<18149318>>பேசிய EPS<<>>, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எவ்வித தயக்கமும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


