News June 28, 2024
4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம்

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் 4 நகராட்சிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேலும் சிறப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக, அமமுக

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவே இல்லை. இன்று நடைபெறும் அதிமுக மா.செ., கூட்டத்திற்கு பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பாஜக, அமமுக அதிகமான இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
நெட் இல்லாமலும் Gmail செக் பண்ணலாம்; இதோ Trick

முக்கியமான மெயிலை செக் பண்ணும்போது இண்டர்நெட் கட் ஆகிடுச்சுனா? கவலையவிடுங்க. Gmail-ல் மெயில்களை Offline-லயும் Access பண்ணலாம். ➤உங்கள் Laptop-ல் Gmail-ஐ Login செய்யுங்கள் ➤செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து ‘Quick Settings’ என்ற ஆப்ஷனை அழுத்துங்க ➤See All Settings என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதை க்ளிக் செய்தால் Offline என்ற ஆப்ஷன் வரும் ➤அதற்குள் சென்று Enable செய்யுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News March 4, 2026
பள்ளி மாணவி குழந்தை பெற்றார்

தெலங்கானாவில் 16 வயது மாணவி குழந்தை பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வயிற்று வலியால் தவித்துவந்த அந்த மாணவி, ஹாஸ்பிட்டலுக்கு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது வலி மேலும் அதிகரிக்க, ஹாஸ்பிடலின் பாத்ரூமிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் பதறிப்போன மாணவியும் அவரது தாயாரும், அக்குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இது போலீசுக்கு தெரியவர, விசாரணை நடந்து வருகிறது.


