News March 15, 2025
2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம்…

திபெத்தில் கடந்த 2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ரிக்டர் அளவில் 3.5 முதல் 4.3 வரை பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 12.49 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் 4 ஆவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. யுரேசியன் தட்டுப்பகுதியில் திபெத் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Similar News
News March 15, 2025
பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ₹1,472 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

2025 – 26 நிதியாண்டில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய ₹1,472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ₹10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ₹215லிருந்து ₹349ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
News March 15, 2025
சந்தனம், செம்மரம் வளர்க்க புதிய கொள்கை!

உழவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், உயர் மதிப்புமிக்க சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி மர வகைகளை வளர்க்கும் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என வேளாண் அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த மரங்களை வளர்ப்பது, பதிவு செய்வது, வெட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்வது ஆகியவை இதன் மூலம் எளிதாகும் எனவும், இதற்காக தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு….

வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.