News August 14, 2024
தனியார் பள்ளிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆக.16 வரலட்சுமி விரதம், ஆக.17, 18 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், பல்வேறு தனியார் பள்ளிகள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவித்துள்ளன. திங்கள் கிழமை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
தேர்தல் தோல்வி… மவுன விரதம் இருக்கும் PK

பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலியாக, நவ.20-ல், காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருக்கப் போவதாக ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பல கனவுகளுடன் அரசியலுக்கு வந்த JSP வேட்பாளர்களின் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், இந்த ஒருநாள் மவுன விரதம், தன்னை சுய பரிசோதனை செய்ய உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். 238 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட ஜன் சுராஜ், ஒன்றில் கூட வெல்லவில்லை.


